இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தறையில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.