Date:

”எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது”

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகக் கூறி, இம்முறை NPP வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பெரும்பான்மையான அரச ஊழியர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இம்முறை தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க எந்த தந்திரத்திலும் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதாவது தந்திரத்தை கையாளுவார் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். அவரால் எந்த தந்திரமும் செய்ய முடியாது. பெரும்பான்மையான அரச ஊழியர்கள் NPP யை ஆதரிக்கின்றனர். பெரும்பான்மையான பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் எமக்கு ஆதரவளிக்கின்றனர். ஓய்வுபெற்ற பொலிஸார் மற்றும் ராணுவ அதிகாரிகள் எங்களுடன் இருக்கிறார்கள் எனவே, நாம் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

மக்களைப் பேணிக்காப்பதற்காகவே முதன்முறையாக NPP அரசாங்கத்தை அமைக்கும் எனத் தெரிவித்த திஸாநாயக்க, இதுவரை ஆட்சியாளர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களைக் கவனிப்பதற்காகவே அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ரணிலுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றம் ரணிலுக்கு பிணை வழங்கியது. அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ரணில் கைது: ஐ.தே.க ஆதரவாளர்கள் குவிந்தனர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...