நிலத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ´ஆகாஷ் பிரைம்´ ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது.
ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
´ஆகாஷ் பிரைம்´ ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.