ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதி அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இந்த முடிவை அறிவித்தனர்.
