எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சில் நேற்று மதியம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சகங்களின் செயலாளர்கள், பொலிஸார் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதன்படி, முதலாம் திகதி முதல் காலை 9 மணிக்கு அரசு ஊழியர்களை அழைக்கவும், காலை 10 மணிக்கு தனியார் துறை ஊழியர்களை அழைக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.