Date:

சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் விஷேட மாநாடு

amazon college and campus

சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர்களுக்கான விஷேட மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற உள்ளது.

இவ்விஷேட மாநாட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கட்சியின் நிலைப்பாட்டினை, செயற்குழு அங்கத்தவர்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க, தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

மேலும், சமூக நீதிக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மக்கள் மயப்படுத்துவது, கட்சியினை தேசிய ரீதியில் விஸ்தரிப்பது, நாடளாவிய ரீதியில் மேலும் பல புதிய உறுப்பினர்களைச்  சேர்ப்பது, கட்சியை பலப்படுத்துவது மற்றும் கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்கிலேயே இம்மாநாடு கூட்டப்படுகிறது.

‘திடமாய் முன்னோக்கி’ எனும் மகுடத்தின் கீழ் நடைபெறும் இம்மாநாடு கட்சியின் அடுத்த கட்ட நகர்வுக்கான முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித்...

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...