Date:

சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் விஷேட மாநாடு

amazon college and campus

சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர்களுக்கான விஷேட மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற உள்ளது.

இவ்விஷேட மாநாட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கட்சியின் நிலைப்பாட்டினை, செயற்குழு அங்கத்தவர்களுடன் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க, தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

மேலும், சமூக நீதிக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மக்கள் மயப்படுத்துவது, கட்சியினை தேசிய ரீதியில் விஸ்தரிப்பது, நாடளாவிய ரீதியில் மேலும் பல புதிய உறுப்பினர்களைச்  சேர்ப்பது, கட்சியை பலப்படுத்துவது மற்றும் கட்சியின் எதிர்கால செயற்திட்டங்கள் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்கிலேயே இம்மாநாடு கூட்டப்படுகிறது.

‘திடமாய் முன்னோக்கி’ எனும் மகுடத்தின் கீழ் நடைபெறும் இம்மாநாடு கட்சியின் அடுத்த கட்ட நகர்வுக்கான முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...