Date:

அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை

அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த அச்சுறுத்தல் சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இதேவேளை பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது சிறைச்சாலை வசதிகள் தொடர்பாகவோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பிரச்சினை இருக்குமாக இருந்தால், உயர் பாதுகாப்பு இடத்துக்கு அனுப்ப முடியும் என தான் அவர்களிடம் கூறியதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...