Date:

துப்பாக்கி பிரயோகங்களில் பெண்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

amazon college and campusமொனராகலை, நாமல்ஓயா மற்றும் இங்கினியால பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை – நாமல்ஓயா பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை 2.45 அளவிள் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இங்கினியால பகுதியிலுள்ள வீடொன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இங்கினியால – நெல்லியந்த பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவரும், 17 வயதான அவரது மகளும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, மொனராகலை – கரடுகல பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கி சூடு நடாத்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர், 54 வயதான பெண் மற்றும் அவரது 17 வயதான மகள் ஆகியோர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தி கொலை செய்த பின்னர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனக்கு தானே துப்பாக்கி சூடு நடாத்தி உயிரிழத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும்,...

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன்...