Date:

பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில்  சாதனை

குருநாகல் இப்பாகமுவ கல்வி வலயதிற்குற்பட்ட பாணகமுவயில் அமைந்துள்ள அந்நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் சாதனை படைக்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் 8 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்திகளையும் 3 மாணவர்கள் 8 பாடங்களில் A மற்றும் 1B சித்திகளைப் பெற்றதோடு பரீட்சைக்குத் தோற்றிய 101 பேரில் 90 பேர் க.பொ.த உயர்தரத்தில் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி மற்றொரு மைல் கல்லாக இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச்சாதனை படைத்தது.
இதேவேளை 15 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் எம்.ஏ.மித்ஹான் என்ற மாணவன் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் 2020/06/29 அன்று க.பொ.த உயர்தர கணித,விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதோடு இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

2018ம் ஆண்டு இப்பாடசாலைக்கு அதிபராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட ஏ.எஸ்.எம்.இர்ஷாத் அதிபரது தலைமையில் கல்வி நடவடிக்கைகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பாரிய அபிவிருத்தியை நோக்கிச் சென்றது.

தொடர்ந்தும் இப்பாடசாலை சமூகத் தலைவர்களை உருவாக்கும் பணியில் வீர நடைபோடுவதற்கு வாழ்த்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...