ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னக்கோனுக்கு பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற உயர் நீதிமன்றம் இடைகால தடையை இன்று விதித்திருந்தது.
அத்துடன், அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த வர்த்தமானியை அமுலாக்க இதன்மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.


                                    




