Date:

க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொலை சம்பவம்; மேலும் இருவர் கைது

க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

க்ளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டின் கீழ் குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தப்பிச் செல்வதற்கு உதவியை வேனின் சாரதியும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபர்களை பஸ்ஸில் அழைத்து சென்ற சாரதியும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

வெளிநாடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் நிழலுலக தலைவருடன், வாட்ஸ் அப் ஊடாக இந்த சந்தேகநபர்களில் தொடர்பில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...