Date:

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, இதயநோய், தலசீமியா, சிறுநீர் மற்றும் உணவுக் குழாய் பாதிப்புகள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, இந்தத் தடுப்பூசி செலுத்தலுக்காக அழைத்துவருமாறும்  பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறும்.

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தகட்டமாகத் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த நடவடிக்கை, வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...