Date:

பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

பேரூந்தில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முருதலாவ, தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரென்று தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின்னாலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நபர் பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டமையை தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் குறித்த சம்பவத்தை எதிர் கொண்ட யுவதி, சந்தேக நபரையும், அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மடவளை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் மேற்படி சம்பவத்தை எதிர் கொண்டுள்ளார்.

அவருடைய முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து இது தொடர்பான உண்மைத் தன்மையை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...