Date:

இணையத்தில் பதிவேற்றிய கண்டி நபர் கைது

இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவான சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றியமை தொடர்பில், இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்க, கொழும்பு கணிணி குற்றத் தடுப்பு பிரிவில் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்தே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபா செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இலங்கையில் தற்போது வெற்றி திரைப்படமாக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு...

கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு!

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி...

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில்...

தங்கம் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...