Date:

(video) ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் ( 14ஆம் திகதி 2024) சாலிக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டித் தொடர் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பு மற்றும் பங்குபற்றும் அணிகளின் சீறுடை (jersey) அறிமுக நிகழ்வு மிக விமர்சையாக நேற்றைய தினம் வௌ்ளம்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி திரு. முனீர் தௌவ்பிக் மற்றும் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம் மரைக்கார் கலந்துகொண்டனர்,

மேலும், அதிதிகளாக பாடசாலையின் அதிபர் திரு. எம்.ஆர்.எம். ரிஸ்கி , பாடசலையின் மாணத்தலைவர்களுக்கான பொறுப்பு ஆசிரியை திருமதி ஓ.எஸ்.எப். ஸாமா, பழைய மாணவர்கள் சங்கக்குழுவின் செயலாளர் திரு.இம்தியாஸ் இல்யாஸ், பாடசலை அபிவிருத்தி சங்க குழுவின் செயலாளர் திரு. சப்ராஸ் பைஸால், பழைய மாணவர் சங்க குழுவின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு. எம்.சீ.எம். அஜ்வத் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுக்காற்று குழு பொறுப்பாளர் திரு. ஏ. ஆர். எம். இம்தியாஸ், பழைய மாணவ தலைவர் சங்கத்தின் தலைவர் திரு. அஹ்லான் அமானி மற்றும் இப்போட்டி தொடர் ஏற்பாட்டின் தலைவர் திரு. கியூ.எம்.எம் ஹிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் போட்டித்தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் தலைவர்கள், பாடசாலையின் மாணவத்தலைவர்கள் மற்றும் இப்போட்டி தொடருக்கான அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரில் வெற்றி கொள்ளும் அணிக்கான கிண்ணம் மற்றும் விளையாட்டு சீறுடைகள் பிரதம அதிதிகளால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மேலும், அனுசரணையாளர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...