Date:

செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து 11 நாட்களுக்கு பின்னர் உயிர்துறந்தார்.

இதையடுத்து, வருடாந்தம் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 11 நாட்கள் திலீபனின் நினைவேந்தல் வாரம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய, நீதிமன்ற தடை உத்தரவை மீறி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...