Date:

ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி – பிரதமர் இடையிலான சந்திப்பு இன்று

கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம்  என்பன  கேள்விப்பத்திரமின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் கட்சியினது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடவுள்ளனர்.

அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மையப்படுத்தி இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்தது. எனினும், இன்று பிற்பகல் வரை இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையேயான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

கெரவலப்பிட்டி சுகதநவ் நிலையத்தில் திரவ இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி  நிர்மாணம்  கேள்விப்பத்திரமின்றி அமெரிக்காவின் நிவ் போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் தற்போது கருத்தாடல்கள் வலுப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் ஆளும் கட்சியினது பங்காளிக் கட்சிகளின் தலைவர் கடந்த திங்கட்கிழமை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரின் காரியாலயத்தில் ஒன்றுக்கூடி கலந்துரையாடல் நடத்தினர்.

இதுதவிர, ஆளும் கட்சியினது பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால  சிறிசேனவுக்கிடையே நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆளும் கட்சியினது பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தெளிவுப்படுத்த குறித்த கலந்துரையாடலில் பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...