கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (28) மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்பட்டதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளினால் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஹிருணிகா பிரேமசந்திரவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவனை, டிஃபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.