Date:

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் அனுஸ்டிப்பு

இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக பிராஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு “பிரஜா விருட்சம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட இ.தொ.காவின் இளைஞர் அணியின் தலைவர் ராஜமணி பிரசாத், செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...