Date:

திடீரென 7 விமானங்கள் இரத்து

இலங்கையில் இன்று 06 விமானங்கள் திடீரென இரத்துச்செய்யப்பட்டமையினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் வருந்துவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கன் விமான சேவையில் தொழில்நுட்ப கோளாறுகள், விமான உதிரி பாகங்கள் தட்டுப்பாடு, ஊழியர்களின் பிரச்சினைகள் என பல நெருக்கடிகள் காணப்படுகின்றன.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் பல ஆலோசனைகள் இருப்பதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அதுல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், விமானங்களுக்கான டிக்கெட்டுகள் பல மாதங்களுக்கு முன்னரே விற்பனை செய்யப்படுவதாகவும், சில நேரத்தில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், விமானங்களை இரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கு செல்லவிருந்த 06 விமானங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373