இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரால் செய்துகொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.