Date:

குஜராத்தில் தேசிய மக்கள் சக்தி குழு

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) குழுவினர், தமது இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் தாயகமான குஜராத்தை நோக்கி நேற்று சென்றனர்.

NPP தூதுக்குழு குஜராத் முதல்வர் புபேந்திர படேலை சந்தித்து மாநிலத்தில் சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NPP தூதுக்குழு நேற்று முன்னணி இந்திய சிந்தனைக் குழுவான Observer Research Foundation ‘ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

மேலும், NPP பிரதிநிதிகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை பார்வையிட்டனர். முன்னதாக, இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் வினய் மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழுவானது பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் இந்திய மாநிலமான கேரளாவுக்குச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...

தென்னாபிரிக்கா திரில் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11)...