Date:

இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அறிவித்தல்

பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அந்த கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜமேய்க்கா, ப்ரூனே ஆகிய நாடுகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு அத்தியாவசியமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிதல், 6 அடி தூர சமூக இடைவெளி மற்றும் இலங்கை சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுதல் அவசியம் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...

நாளைய காலநிலை : எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை தினம் (05) வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கிய இலங்கை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...