M S முஷாப் என்ற காத்தான்குடியை சேர்ந்த 13 வயது மாணவன் சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என மதரசாவை பொது மக்கள் முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸாவிலே மாணவன் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.





