Date:

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யசரா பதுளையில் வசிக்கும் இளம் பெண்ணாகும். அவர் இரண்டு பெண்களைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் என தெரியவந்துள்ளது.

இவரது தாயார் சந்தியா பதுளை மாநகர சபையில் பணிபுரிகிறார். இவரது தந்தை காமினி குணசேகர. அவரது மற்றுமொரு சகோதரியும் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற யசரா, 2017 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார்.

பல்கலைக் கழகக் கல்வியை முடித்து இரண்டு மாதங்களேயான நிலையில் உயிரிழந்துள்ளார்.

படிக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்திற்கமைய, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வின் ஆரம்ப பகுதி முடிந்துவிட்டாலும், இன்னொரு கட்ட நேர்முக தேர்வ இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த இரண்டு மூன்று நாட்களும் தன் பல்கலைகழக நண்பர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே தங்கிவிடலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றுள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, இரவு 10.30 மணியளவில் அவரது நண்பர்கள் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் கடந்த 2ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியிடாத நிலையில் உடற் பாகங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரஷ்யாவிற்கு ரணில் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) அன்று காலை ரஷ்யாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். ரணில் விக்கிரமசிங்க பல சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் ​மேலும், 22 ஆம் திகதி நாடு...

NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த...

இலங்கையில் ஏற்பட்ட இரண்டு கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ...

கல்வியமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக எம்.என்.எப். நஸ்ரியா முனாஸ் நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373