Date:

அஜித் நிவாட் கப்ரால் அமைச்சு, பராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளாரா?

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விடயம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதன் போது, ‘இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாகவும், அந்த தொகை 19 இலட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அர்ஜூன் அலோசியசுக்கும் அதனை வழங்க வேண்டியேற்படுமே? ‘ என்று வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே போன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகி, மீண்டும் மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்டவையல்ல என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...