Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 798 குடும்பங்களை சேர்ந்த 2930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 172 குடும்பங்களைச்சேர்ந்த 556 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கேகாலையில் 26 குடும்பங்களை சேர்ந்த 92 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 30 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 62 குடும்பங்களை சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில்  21 குடும்பங்களை சேர்ந்த 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

50 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 1 மரணம் நிகழ்ந்துள்ளது

மாத்தளை மாவட்டத்தில் 22 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 50 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்

வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் 2  குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

வடமேல் மாகாணம் குருனாகல் மாவட்டத்தில் 708 குடும்பங்களை சேர்ந்த 2591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 116 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 639 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...