Date:

இலங்கையில் தலைதூக்கிய டெங்கு – அதியுயர் அபாயத்திலுள்ள மாவட்டம்

2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15,503 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 34,700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியில் நவம்பர் மாதத்தில் 4,539 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவே மாகாண மட்டத்தில் அதிகளவினான எண்ணிக்கை என தெரிய வருகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே, டெங்கு தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

டெங்கு தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...