Date:

விமான நிலையத்தில் சிக்கிய 11 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – 02, கொம்பெனித் தெரு பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் இன்று அதிகாலை 1.40 மணி அளவில் டுபாயில் இருந்து Fly Dubai விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

6 கிலோ 423 கிராம் 9 மில்லி கிராம் எடையுள்ள தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள், அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான அரசு இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள், விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் வரை அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...