வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மாணவி முதலாம் தர மாணவி என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.