Date:

இலங்கை கிரிக்கெட் இன்று கோப் குழு முன்னிலையில்

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் முன் இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைக்கப்பட்டுள்ளது.

இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் எம்.பி.ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்போது இதற்கு முன்னர் இரண்டு கோப் குழு அமர்வுகளின் போதும் வெளியிடப்பட்ட 02 விசேட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழுவிற்கும் இலங்கை கிரிக்கெட் அழைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இன்றைய கலந்துரையாடலுக்கு கணக்காய்வாளர் நாயகம் முன்வைக்கவுள்ள அறிக்கையில் முன்னர் கிரிக்கட் சபைக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்படலாம் என கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...