Date:

மேலும் ஒரு முக்கிய தகவலை வௌியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குதல் என்ற தலைப்பில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், அந்த அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

“சுதந்திர சதுக்கத்தில் உள்ள கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை எடுக்கப் போவதாக எனக்கு செய்தி வந்தது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் இருப்பதால் முகாமையாளர், மேலிடம் ஆலோசனை கேட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து உயர் நீதிமன்றம் கருத்து கேட்கப் போவதாக ஊடகங்களில் பார்த்தோம். இந்த கணக்குகளில் பணமோசடி மற்றும் வெளிப்படையான ஊழல் உள்ளது. இவர்களின் கடவுச்சீட்டை முடக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என ஆராய வேண்டும். இவர்களில் ஒருவர் தற்போது  நாட்டில் இல்லை. மேலும் காலத்தை தாழ்த்துவதால் பிரச்சினையே உருவாகும். குதிரை போன பிறகு லாயத்தை மூடுவதில் அர்த்தமில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...