Date:

காதலிக்க மறுப்பு தெரிவித்த யுவதிக்கு நேர்ந்த கதி..! கொழும்பில் கொடூர சம்பவம்

காதலிக்க மறுப்பு தெரிவித்ததன் காரணத்தினால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கொழும்பு – நாரஹேன்பிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர், நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரும், காயமடைந்த யுவதியும் காலியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நாரஹேன்பிட்ட பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளனர்.

நாரஹேன்பிட்ட கிருள வீதியில் அமைந்துள்ள நில அளவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போதே சந்தேகநபர் அவர் வைத்திருந்த கத்தியால் யுவதியை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளன யுவதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...

தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை...