Date:

தொடர் மழை நானுஓயாவிலும் வெள்ளம் வீடுகள் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையக நிருபர் –  செ.திவாகரன் டி.சந்ரு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது

இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளபெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் டெஸ்போட் , கிரிமிட்டி , கிளாரண்டன் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனினும் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிகமாக நானுஓயா கிளாரண்டன் மற்றும் டெஸ்போட் பகுதிகளில் சனிக்கிழமை (04) பிற்பகல் வேளையில் பெய்த அடை மழை காரணமா அதிகளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் வெள்ளம் ஏற்பட்டமை விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...