Date:

அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்..! இலங்கையில் பரபரப்பு!

நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (31) பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த  49 வயதான நபர் எனத் தெரிய  வந்தது.

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டபிட்டிய பிரதேசத்திலும்  சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபரின் உடலில் இரத்தம் வடிந்து உயிரிழந்துள்ளதுடன், தாக்குதல் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஸ்மல்ல பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்தடுத்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373