Date:

அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்..! இலங்கையில் பரபரப்பு!

நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (31) பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த  49 வயதான நபர் எனத் தெரிய  வந்தது.

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டபிட்டிய பிரதேசத்திலும்  சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபரின் உடலில் இரத்தம் வடிந்து உயிரிழந்துள்ளதுடன், தாக்குதல் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஸ்மல்ல பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்தடுத்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...