தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலில், மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஓக்டோபர் 23 ஆம் திகதியன்று வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.