Date:

போர் நெருக்கடி – தங்க விலையிலும் தாக்கம்

வெளிநாட்டு சந்தையில் இந்த நாட்களில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோக பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இலங்கை சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 1 இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோக பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...