Date:

கொழும்பில் பதற்றம் – தனியார் அலுவலகம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு

கொழும்பு – கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம்  நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

குறித்த துப்பாக்கி சூட்டின் போது அலுவலக கட்டிடத்திற்குள் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருந்துள்ளார், எனினும், அவருக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தொழிற்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் மூன்று வெற்று புல்லட் குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை எனினும், சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...