Date:

நோய்கள் பரவும் அபாயம்..! பழங்கள், மரக்கறி உண்பதில் கவனம் செலுத்தவும்..! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் கலந்துள்ளதால், கொதித்தாரிய நீரை அருந்துவது மிகவும் ஏற்றது என பிரதி சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்  கலாநிதி  ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

கீரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.

இதேவேளை, இடைதங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இடையே சின்னம்மை, கண் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்பதால் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனையை பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...