Date:

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்குமா?

மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்குமா? உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் கமல் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

இந்த மாதம் முதல் மின் கட்டணத்தை திருத்தியமைக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எரிபொருள் விலையேற்றத்தினால் தமது தொழிற்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படுமானால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்குமா? உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...