Date:

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்..!

கம்பளை நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது.

தம்பதிகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்திலிருந்து  இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.

அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு சுமார் 50 மீற்றர் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இருப்பினும்,   தீயை அணைக்க முயற்சித்த போதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமானது.

இதேவேளை, கம்பளை மாநகர சபைக்குள் தீயணைக்கும் பிரிவு இன்மையால் இவ்வாறான சம்பவங்களின்போது  தீ பரவி  அழிவை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

வெளியே செல்வதைத் தவிர்க்கவும்! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம், இன்று (07)...

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...