உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது, கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, சகல விதமான கோழியிறைச்சிகளினதும் கிலோவொன்றின் விலையை இன்று(22) முதல் 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 1 கிலோ கோழியிறைச்சியின் விலை 1150 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் கோழியிறைச்சியின் விலை மேலும் 100 ரூபாவால் குறையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.