Date:

பாடசாலை மாணவர்களின் பைகளுக்குள் சிக்கிய இன்ஹேலர் கருவிகள் : விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

குருநாகல்  கொகரெல்ல பிரதேசத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அந்த பாடசாலையின் ஆசிரியர், மாணவர்களின் புத்தக பைகளை அவசரமாக ஆய்வு செய்ததில், பல மாணவர்களின் பைகளில் இன்ஹேலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இப்பாகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றை நடத்தும் ஒருவரினால் இந்தக் கருவிகள் விற்பனை செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் கொகரெல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...