Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனி காத்திருக்கத் தேவையில்லை…! வெளியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தானியங்கி பம்பிகள் மற்றும் உபகரணம் பொருத்தப்பட்ட பின்னர், எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரும் நுகர்வோர், தமக்குத் தேவையான எரிபொருளை தாமே பெற்றுக் கொண்டு உரிய உபகரணத்தில் பணத்தை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு விரைவாக எரிபொருள் முகாமைத்துவத்தை மேற்கொள்ளவும் அதற்கான தொகையை அறவிட்டுக் கொள்ளவும் வசதி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக தினந்தோறும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என மின்சக்தி,  எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...