Date:

மகனுக்கு நேர்ந்த துயரத்தால் உயிரை மாய்த்த தாய்

குருணாகல், மஹவ பிரதேசத்தில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மஹவ பொலிஸார் வெளியிட்ட தகவலுக்கு அமைய, உயிரிழந்த பெண்ணின் மகன் மேலும் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து நபர் ஒருவரை தாக்கியதாகவும், அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் இந்த தாக்குதலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் மகன் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு மஹவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகன் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த பெண் உயிரை மாய்த்ததாகவும் ஆனால் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை…

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த...

எரிபொருள் விலையேற்றத்தால் பொதுப் போக்குவரத்து இலவசம்

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள்...

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் – IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின்...

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...