Date:

மீண்டும் அரசியலுக்கு திரும்பும் கோட்டா?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் அரசியலுக்கு பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்ற கோட்டாபய ராஜபக்ஷ முனைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் பதிவு செய்யப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மவ்பிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆசிர்வாதங்களை வழங்கி மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பார் என அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...