Date:

மொராக்கோ பூகம்பத்திற்கு சற்று முன் பிறந்த குழந்தை; தாயுடன் கூடாரத்தில்

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை,ஆனால் அந்த குழந்தையின் வீதியோரத்தில் உள்ள கூடாரம் ஒன்றில் தாயுடன் இருப்பதாக கூறப்படுகின்றது

கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு மொராக்கோவை பாரிய பூகம்பம் தாக்குவதற்கு சிலநிமிடங்களிற்கு முன்னர் கதிஜாவின் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாயும் குழந்தையும் காயங்களுக்குள்ளாகாத போதிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழந்தை பிறந்து மூன்று மணித்தியாலங்களில் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.

மராகெஸிலிருந்து புதிதாக பிறந்த குழந்தையுடன் டடார்ட்டில் உள்ள தங்கள் கிராமத்திற்கு அந்த குடும்பத்தினர் செல்ல முயன்றனர். எனினும் மண்சரிவு காரணமாக அது சாத்தியமாகவில்லை இதன் பின்னர் அவர்கள் வீதியின் ஒரத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் வாழ்கின்றனர்.

எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்த அந்த தாயார், கடவுள் மாத்திரமே எங்களுடன் இருக்கின்றார் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை மொரோக்கா பூகம்பத்தில் 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் , அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில் பலி எண்னிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...