Date:

மொராக்கோ பூகம்பத்திற்கு சற்று முன் பிறந்த குழந்தை; தாயுடன் கூடாரத்தில்

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை,ஆனால் அந்த குழந்தையின் வீதியோரத்தில் உள்ள கூடாரம் ஒன்றில் தாயுடன் இருப்பதாக கூறப்படுகின்றது

கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு மொராக்கோவை பாரிய பூகம்பம் தாக்குவதற்கு சிலநிமிடங்களிற்கு முன்னர் கதிஜாவின் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாயும் குழந்தையும் காயங்களுக்குள்ளாகாத போதிலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழந்தை பிறந்து மூன்று மணித்தியாலங்களில் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.

மராகெஸிலிருந்து புதிதாக பிறந்த குழந்தையுடன் டடார்ட்டில் உள்ள தங்கள் கிராமத்திற்கு அந்த குடும்பத்தினர் செல்ல முயன்றனர். எனினும் மண்சரிவு காரணமாக அது சாத்தியமாகவில்லை இதன் பின்னர் அவர்கள் வீதியின் ஒரத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் வாழ்கின்றனர்.

எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்த அந்த தாயார், கடவுள் மாத்திரமே எங்களுடன் இருக்கின்றார் எனவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை மொரோக்கா பூகம்பத்தில் 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் , அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில் பலி எண்னிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...