Date:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 192 தற்கொலைகள்…! வெளியான புள்ளிவிபரத்தால் அதிர்ச்சி

கடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் 2832 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இது 83% ஆகும். பொருளாதாரச் சிக்கல்களால், 2022ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 192 ஆக உள்ளது. இது 5.06% ஆகக் காட்டப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 593 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது 17.04% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

274 பேர் போதைக்கு அடிமையானவர்கள் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 8% ஆகும்.

மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 412 பேர் தற்கொலை செய்து கொண்டனர், இது 12% ஆகும்.

2023ஆம் ஆண்டு தொடர்பான தற்கொலைத் தரவுகளை சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சினால் பெறமுடியவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளை சேகரிக்க நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உதவியதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373