Date:

நுவரெலியாவில் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து (photos)

நுவரெலியா நிருபர் – செ.திவாகரன்

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக பஸ் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளை செலுத்திச் சென்றவர்கள் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெளிமடையிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் நுவரெலியாவில் இருந்து பொரகஸ் பிரதேசத்தை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது .

குறித்த விபத்தானது மோட்டர் சைக்கிளில் பயணித்த திசையில் நுவரெலியாவிலிருந்து மீபிலிமான நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டர்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதிவருமாறு கோரிக்கை

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும்...

மித்தெனிய இரசாயனங்கள் – அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வௌியானது

மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின்...

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை...

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள...