15 வயதான சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சட்டை பின்கள் இரண்டை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பொத்துப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய தவறான மனைவியின் மகளை வன்புணர்விற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரு தரப்பினரையும் புதன்கிழமை (06) அழைத்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டிருந்த போதே சந்தேகநபர் பதற்றமடைந்து இவ்வாறு சட்டை பின்களை விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.